வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் புகார்!

செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:00 IST)
வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் சந்தேகம்:
வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் அருண் திடீரென நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்
 
இந்த நிலையில் திடீரென அருணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் அருண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து சந்தேக மரணமாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
அருண் அவர்களின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக மரணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும் இருப்பினும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்
 
வாசன் ஐகேர் குழுமத்தின் தலைவர் அருண் அவர்களை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சிலர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்