பல்டி அடித்தும் 4 பிரிவுகளில் வழக்கு: நடிகர் வரதராஜன் அதிர்ச்சி?

செவ்வாய், 9 ஜூன் 2020 (08:27 IST)
தொலைக்காட்சியை நடிகரும் செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தனது நண்பர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எந்த மருத்துவமனையிலும் பெட் கிடைக்கவில்லை என்றும் இதனை அடுத்து நீண்ட கஷ்டத்திற்கு பின்னர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் எனவே சென்னையில் எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லாததால் மக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் 
 
இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானதை அடுத்த இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ’உண்மைக்கு புறம்பான ஒரு தகவலை நடிகர் வரதராஜன் கூறியிருப்பதாகவும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பெட்கள் தாராளமாக இருப்பதாகவும் இதனை அடுத்து வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்ட வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இதனை அடுத்து நடிகர் வரதராஜன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் தான் பெட் இல்லை என்று தான் கூறியதாவதாகவும், தற்போது தனது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வருவதாகவும் தமிழக அரசும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
 
நடிகர் வரதராஜன் ஒரே நாளில் பல்டி அடித்த போதும் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பெயரில் தவறான தகவல் மூலம் விரோத உணர்வை தூண்டுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், அரசின் உத்தரவுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது ஆகிய நான்கு பிரிவுகளில் வரதராஜன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது என வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது தரப்பினர் அதிர்ச்சி என தகவல் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்