9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

புதன், 19 ஜனவரி 2022 (12:02 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
கடந்த சில நாட்களாக திடீர் திடீரென சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 
 
அதன்படி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்