சில்வண்டு சிக்கும் ஆனா… போக்கு காட்டும் சிறுத்தை! – கோவையில் பரபரப்பு!

புதன், 19 ஜனவரி 2022 (10:19 IST)
கோவை பி.கே.புதூர் பகுதியில் குடோன் ஒன்றில் சிறுத்தை நடமாடும் காட்சி வைரலான நிலையில் அதை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், சிறுத்தை குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதுங்கி போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் தனியார் குடோனில் சிறுத்தை நடமாடும் காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்