4 மாவட்டங்களில் 806 ஏரிகள் 100% நிரம்பின

வியாழன், 18 நவம்பர் 2021 (11:35 IST)
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள சுமார் 806 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
 
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள சுமார் 806 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 1,022 ஏரிகளில் 806 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 
 
மேலும் 169 ஏரிகள் 75 சதவீதமும், 47 ஏரிகள் 50 சதவீத அள்வும் நிரம்பியுள்ளதாக பாலாறு வடிநிலக் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு விழுப்புரத்தில் உள்ள 506 ஏரிகளில் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், 60 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்