பின்னர் இது குறித்து விசாரணை செய்தபோதுதான் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் தான் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அதனை அடுத்து மகளிர் போலீசார் சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.