தமிழகத்தில் 3 பேரின் முதலமைச்சர் கனவு தகர்ந்துவிட்டது - இளங்கோவன் கிண்டல்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (18:18 IST)
தமிழகத்தில் 3 பேரின் முதலமைச்சர் கனவு தகர்ந்துவிட்டது. எதிர்கட்சிகள், லெட்டர்பேடு கட்சிகள் காணாமல் போய் விட்டன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ”மதுக்கடை திறப்பை காலை 10 மணியில் இருந்து 12 மணியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்புதான்.
 
இரவு 10 மணி வரை கடை திறந்திருப்பதை முன் கூட்டியே இரவு 7 மணிக்கே அடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மது விலக்கு அறிவிப்புக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
 
தமிழகத்தில் 3 பேரின் முதலமைச்சர் கனவு தகர்ந்துவிட்டது. எதிர்கட்சிகள், லெட்டர்பேடு கட்சிகள் காணாமல் போய் விட்டன. தமிழகத்தில் 3ஆவது பெரிய கட்சியாக காங்கிரஸ் வளர்ந்துள்ளது.
 
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழக மக்களின் பிரச்சினை களுக்காக தி.மு.கவுடன் இணைந்து காங்கிரஸ் குரல் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்