மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: 3 பேர் மீது வழக்குப்பதிவு!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (07:31 IST)
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: 3 பேர் மீது வழக்குப்பதிவு!
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 3 பேர் பலியானதை அடுத்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
 
இந்த விவகாரத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
சிவகுமார் என்ற தொழிலாளி தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்ததாகவும் அவரை காப்பாற்ற சென்ற சரவணன் மற்றும் லட்சுமண் ஆகிய இருவரும் உள்ளே இறங்கிய போது மூன்று பேரையும் விஷவாயு தாக்கியதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்