தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி அனைத்தும் மூடப்படும் என்று வணீகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அனைத்து கடைகளும் மூடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் 21 லட்சம் கடைகள் மூடப்படும். 11 லட்சம் வாகனங்கள் மற்றும் 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஆட்டோ, பேருந்துகள் அன அனைவரும் ஆதரவு தெரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.