தமிழக எல்லையை கடந்த ரதம்: நெல்லையில் 144 தடை உத்தரவு வாபஸ்

வெள்ளி, 23 மார்ச் 2018 (09:08 IST)
வி.எ.ச்பி அமைப்பின் ராமராஜ்ய ரதம் கடந்த பிப்ரவரி மாதம் உபி மாநிலத்தில் இருந்து கிளம்பி மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக சமீபத்தில் தமிழகத்திற்கு வந்தது

இந்த ரதம் தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்று திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக நெல்லையில் 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அம்மாவட்ட ஆட்சித்தலைவர் பிறப்பித்திருந்தார்

இந்த நிலையில் ராமராஜ்ய ரதம் நேற்று ராமேஸ்வரம் சென்று பின்னர் இன்று காலை நாகர்கோவில் வழியாக திருவனத்திற்கு சென்றது. ராமராஜ்ய ரதம் தமிழக எல்லையை கடந்துவிட்டதால் நெல்லையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலை 6 மணி முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்