65 வயது முதியவர் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அவலம்!

புதன், 31 மே 2017 (12:41 IST)
வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த 14 வயது சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர் அடிக்கடி பலாத்காரம் செய்து 6 மாதம் கர்ப்பமாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியின் கர்ப்பம் தற்போது சட்ட விரோதமாக கலைக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
ஆம்பூரை சேர்ந்த 65 வயதான சலீம் என்பவர் அந்த பகுதியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஷகீரா என்ற மனைவியின் மூலம் 9 பிள்ளைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார்.
 
உறவினர்கள் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த வீட்டிற்கு சென்ற வந்த அந்த முதியவர் அங்கிருந்த 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
 
அடிக்கடி வயிற்று வலி வருகிறது என ஸ்கேன் எடுத்து பார்த்த பின்னர் தான் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவசர அவசரமாக சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தனர்.
 
இந்நிலையில் சிறுமியின் தந்தை போலீசில் இது தொடர்பாக புகார் அளிக்க சிறுமிக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததாக மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது காவல்துறை. மேலும் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாக உள்ள முதியவர் சலீமை போலீசார் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்