எருது விடும்விழாவில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம் !

சனி, 15 ஜனவரி 2022 (17:00 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி   கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருது விடுவிழா நடந்து வருகிறது. இதில் மாடுகள் முட்டியதில் சுமார் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஒசூரில் ஆருப்பள்ளி என்ற கிராமத்தில் இன்று எருதுவிடுவிழா நடந்து வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இருபுறமும் தடுப்புகள் அமைத்திருந்த   நிலையில், மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்