10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்

வியாழன், 16 நவம்பர் 2023 (13:04 IST)
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு  திருப்பி அனுப்பியுள்ளார் தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுனருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில்,  மசோதாக்களை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளார்.

மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு  திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுனர் ரவி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்