திருமணமான ஆறு நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: திருவள்ளூரில் பரபரப்பு

Siva

ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (10:40 IST)
திருவள்ளூர் அருகே, திருமணமான ஆறு நாட்களில் நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, காசிரெட்டி பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயது உதயகுமார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டார்.
 
திருமண விருந்துக்காக மணமகளின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு காலை உதயகுமார் தனது நண்பர்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரை அவரது குடும்பத்தினர் தேடினர்.
 
அப்போது, அவர் விபத்தில் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உதயகுமார் உயிரிழந்தார்.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. திருமணமான ஆறு நாட்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்