பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

Mahendran

வெள்ளி, 30 மே 2025 (14:54 IST)
14 வயது இளம்  கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி, முதல் போட்டியிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 7 போட்டிகளில் 252 ரன்கள் அடித்து, ஒரு சதமும், அரைசதமும் அடைந்த அவரது ஸ்டிரைக் ரேட் 206.55 ஆகும், இது மிகப் புகழ்பெற்ற சாதனையாகும்.
 
சூர்யவன்ஷி சமீபத்தில் பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். தனது குடும்பத்துடன் அந்த சந்திப்பில் கலந்துகொண்ட அவர், மோடியின் வாழ்த்துகளை பெற்றதில் பெருமைப்பட்டார்.
 
பிரதமர் மோடி X பக்கத்தில் “பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். இவருடைய திறமை இந்திய அளவில் பாராட்டப்பட வேண்டியதாகும். அவரது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக அமைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்தார்.
 
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிப்பும் ஆதரவும் அளிக்கும் மோடியின் இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் வாழ்க்கை மேலும் சிறக்க, இது ஒரு புதிய துவக்கம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்