அமைச்சரின் பலான வீடியோவை வெளியிடுவேன் : மிரட்டும் பெண் டி.எஸ்.பி

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (14:43 IST)
கர்நாடக அரசியலில் அமைச்சர் பரமேஸ்வர் நாயக், பெண் டி.எஸ்.பி அனுபமா ஷெனாய் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தற்போது அமைச்சரின் பலான வீடியோவை வெளியிடுவேன் என அனுபமா ஷெனாய் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


 
 
அனுபமா ஷெனாய் திறமையான பெண் டி.எஸ்.பி என பெயர் எடுத்தவர். கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டதில் பணி புரிந்த இவர் கடந்த சில தினங்களுக்கு பின்னர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த பரமேஸ்வர் நாயக்கின் நெருக்கடியால் தான் அனுபமா ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
 
தற்போது தலைமறைவாக இருக்கும் அனுபமாவை காவல் துறையினர் தனிப்படை வைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனுபமா, நான் ராஜினாமா செய்துவிட்டேன், பரமேஸ்வர் நாயக் எப்போது ராஜினாமா செய்வார்" என பதிட்டிருந்தார்.
 
மேலும், அமைச்சரின் ஆடியோ, வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அந்த வீடியோவை இரவில் மட்டுமே பார்க்க முடியும். இதில் உங்களுக்கு எந்த வீடியோ வேண்டுமோ அதை வெளியிடுகிறேன் என்று பேஸ்புக் கூறியிருக்கிறார் அனுபமா ஷெனாய்.
 
இந்நிலையில் மேலும் ஒரு பேஸ்புக் பதிவில், அந்த வீடியோவை சிறுவர்கள் நலன் கருதி தற்போது வெளியிடவில்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளன.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்