கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் ? மத்திய அரசுக்கு மானியக்குழு பரிந்துரை !!!

சனி, 25 ஏப்ரல் 2020 (16:51 IST)
கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் திறப்பது குறித்தும் தேர்வுகளை நடப்பது குறித்தும் பல்கலை மானியக்குழு ஆய்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்க பல்கலைக் கழக மானியக்குழு மத்திய அரசுக்குய் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், தேர்வுக்குரிய கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் நடத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை நடத்தமுடியாவிட்டால், ஊரடங்கு உத்தரவுகள் முடிவடைந்த பின், தேர்வுகள் நடத்துவது குறித்து,பல்கலைக் கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும்  என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்