அக்டோபர் 15 ஆம் தேதிவரை மூடப்படும் தகவலை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

புதன், 22 ஏப்ரல் 2020 (15:41 IST)
இந்திய அரசு வரும் அக்டோபர் 15 ஆம் தேதிவரை ஹோட்டல்கள் மூடப்படும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், மத்திய அரச் இதை மறுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வரும்அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில், மத்திய அரசு இதை மறுத்துள்ளது.

மேலும்,  மத்திய அரசு இதுகுறித்து கூறியுள்ளதாவது, இந்தியாவில்  வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஹோட்டள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்