வீரப்பனை வேட்டையாடியது எப்படி? விஜயகுமாரின் புத்தகம் வெளியீடு

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (22:18 IST)
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில காவல்துறையினர்களுக்கு பல ஆண்டுகாலம் தண்ணி காட்டிய சந்தனக்கடத்தல் வீரப்பனை முன்னாள் டிஜிபி மிகச்சரியாக திட்டம் போட்டு என்கவுண்டர் செய்தார்.



இந்த நிலையில் வீரப்பனை வேட்டையாடிய தன்னுடைய அனுபவம் குறித்து அவர் கடந்த சில மாதங்களாக புத்தகம் ஒன்றை எழுதி வந்தார். “Veerappan Chasing the Brigand” என்ற இந்த புத்தகத்தில் வீரப்பனை பிடிக்க நடத்தப்பட்ட ஆபரேஷன் குறித்தும், அப்போது போலீஸார் எதிர்கொண்ட சவால்கள், நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. புத்தக வெளியீட்டு விழாவில் விஜயகுமார், தேவாரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்