கூகுள் பே, ஃபோன்பே போன்ற UPI செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய NPCI சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் சீராகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்காக இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
ஒரு பயனர் தனது வங்கி கணக்கு இருப்பை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே UPI செயலி மூலம் சரிபார்க்க முடியும். அதேபோல், செயலியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் தகவலை ஒரு நாளில் 25 முறைக்கு மேல் பார்க்க முடியாது.
இந்த புதிய விதிமுறைகள், UPI பண பரிவர்த்தனைகளை வேகமாகவும், தடையின்றியும் மேற்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.