”வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து
புதிய வருமான வரி சட்டம்!
வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது
வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்
விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்
அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்
இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்
ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்..!
பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்
பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கபடும். பாட்னா விமான நிலையம் விரிவு செய்யப்படும்
அனைத்து MSME-களின் வகைப்பாட்டிற்கான முதலீடு மற்றும் வருவாய் வரம்புகள் முறையே 2.5 மற்றும் 2 மடங்குகளாக உயர்த்தப்படும். இது நமது இளைஞர்களுக்கு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க நம்பிக்கையை அளிக்கும்.
கடன் பெறுவதை மேம்படுத்த, கடன் உத்தரவாத பாதுகாப்பு அதிகரிக்கப்படும். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி கூடுதல் கடன் கிடைக்கும். தொடக்க நிறுவனங்களுக்கு, ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை கடனுதவி கிடைக்கும். உத்தரவாதக் கட்டணம் 1% ஆகக் குறைக்கப்படும். நன்கு இயங்கும் ஏற்றுமதியாளர் MSME-களுக்கு, ரூ.20 கோடி வரையிலான கால கடன்கள் வழங்கப்படும். உதயம் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவோம்.