அரசு நெருக்கடி தருகிறது: நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் புகார்!

செவ்வாய், 5 ஜூலை 2022 (18:27 IST)
சில அரசியல்வாதிகளின் டுவிட்களை நீக்கம் செய்யவேண்டும் என அரசு நெருக்கடி தருகிறது என டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சில அரசியல் கட்சிகளின் கருத்து பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு கட்டாய படுத்துவதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை கூட பின்பற்றாமல் ட்விட்டர் பதிவுகளை நீக்க அரசு அதிகாரிகள் நிற்பந்தம் செய்வதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவை டுவிட்டர் எதிர்த்து வழக்கு பதிவு செய்துள்ளது
 
ஏற்கனவே டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசின் கொள்கைகளை பின்பற்றவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்