மாணவனை பால்கனியில் இருந்து கீழே தள்ளிவிட்ட ஆசிரியர்!

திங்கள், 19 டிசம்பர் 2022 (22:58 IST)
கர்நாடக மாநிலத்தில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் பால்கனியில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மா நிலம் ஹாக்லி கிராமத்தில்  ஓரு அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாரத். இந்த வகுப்பின் ஆசிரியர் முத்தப்பா. இவர், இன்று திடீரென்று பாரத்தை மண்வெட்டியால் தாக்கியதுடன்,
அவரை பால்கனியில் இருந்து கீழே தள்ளிவவிட்டார்.

இதில், பலத்த காயம் அடைந்த மாணவர் பாரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், பாரத்தின் தாயும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்யும்  நிலையில், அவரையும் ஆசிரியர் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியர் தற்போது தலைமறைவாகியுள்ளதால், அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்