கடவுள் இருக்கு குமாரு ....2 வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை ...வைரல் வீடியோ

ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (14:58 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள டிக்காம்கார் என்ற நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2 வது மாடியில் இருந்து, கீழே சென்ற ரிக்‌ஷா வண்டியின் மீது ஒரு குழந்தை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள டிக்காம்கார் என்ற நகரில் ஒரு  அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள சாலையில் ,இன்று காலையில் ஒரு ரிக்‌ஷா வண்டி சென்றுகொண்டிருந்தது.
 
அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில், ஒரு குழந்தை தனது குடும்பத்தாருடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தை கவனக்குறைவால் கீழே விழுந்தது. நல்லவேளையாக அவ்வழியே வந்த ரிக்‌ஷாவின் இருக்கை பகுதியில் விழுந்ததால் நொடியில்  விபரீதமின்றி உயிர் பிழைத்துக்கொண்டது.
 
தற்போது, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் நலமுடன் இருப்பதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

மாடியில் இருந்து குழந்தை அந்த ரிக்‌ஷாவில் விழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் ’உண்மையில கடவுள் இருக்கு ’அதனால் குழந்தை தப்பித்துக் கொண்டது என்பது போல பேசி வருகின்றனர்.

#WATCH Tikamgarh: A child fell from a building on a rickshaw that was passing on road below. Child's father Ashish Jain says,"He was playing on 2nd floor with family members. He fell from railing after he lost his balance. He was examined at a hospital & is safe". #MadhyaPradesh pic.twitter.com/3yDOzZmB9y

— ANI (@ANI) October 20, 2019
source ANI

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்