ஜே.ஈ.ஈ தேர்வு குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

வியாழன், 31 மார்ச் 2022 (08:00 IST)
ஜே.ஈ.ஈ  தேர்வு குறித்த முக்கிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜே.ஈ.ஈ தேர்வு இதுவரை நான்கு கட்டங்களாக நடத்தி வந்த நிலையில் தற்போது அது இரண்டு கட்டங்களாக குறைக்கப்பட்டு உள்ளது
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பும் வாதம் நடந்தது
 
 இந்த வாதங்களுக்குப் பின்னரே ஜே.ஈ.ஈ முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் தகுதி உள்ளடக்கம் எதுவும் மாறாத போது எப்படி இதற்கு தடை விதிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
 
இந்த கோரிக்கையை உரிய அமைப்பிடம் கேட்டு மனு அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் இதில் தலையிட அவசியம் இல்லை என்றும் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்