இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

Mahendran

செவ்வாய், 20 மே 2025 (14:03 IST)
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே. வினோத் சந்திரனுடன் இணைந்து நீதிபதிகள் நியமன் குறித்த புதிய தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்: அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:
 
*  நீதிமன்றத்தில் பணியாற்ற விரும்பும் நபர், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
*  இந்த புதிய விதி, தற்போது நடைபெற்று வரும் தேர்வுகளுக்கு பொருந்தாது.
 
*   ஆனால் இந்த விதி அடுத்த கட்ட நீதிபதி நியமனத்திலிருந்து இது அமலுக்கு வரும்.
 
*  சிவில் நீதிபதியாக தேர்வு எழுதும் எந்த விண்ணப்பதாரருக்கும் இந்த 3 ஆண்டு அனுபவம் கட்டாயமாகும்.
 
*  அனைத்து மாநில அரசுகளும், தங்களது விதிமுறைகளை இத்தேவைக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
 
*  அனுபவச் சான்றாக, 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரால் ஒப்புதல் பெற வேண்டும்.
 
*  முன்பு சட்ட எழுத்தராக   பணியாற்றிய அனுபவமும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 
*  சட்டம் படித்து வந்த புதுமுகர்கள் நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படுவது, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. ஆனால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
*  வழக்கறிஞர் அனுபவமின்றி நேரடியாக நீதிபதியாகும் நபர்கள், நம்பிக்கைக்குரிய வழக்குகளை கையாளும்போது திறமையற்ற நிலையில் காணப்படுவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த மாற்றம் நீதித்துறையின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்