இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை கடந்த ஜூலை மாதம் மும்பையில் திறந்தது. இந்த ஷோரூம் திறக்கப்பட்ட அடுத்த நாளே, அமைச்சர் பிரதாப் சர்நாயக் மாடல் ஒய் காரை முன்பதிவு செய்திருந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்த காரின் டெலிவரியை அவர் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவின் முதல் டெஸ்லா காரை வாங்கிய பெருமையை தான் பெறுவதாக பிரதாப் சர்நாயக் தெரிவித்தார். மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே, குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தவே இந்த காரை வாங்கியுள்ளேன்" என்று அவர் கூறினார்.
மேலும், இந்தக் காரை தனது பேரனுக்கு பரிசாக அளிக்க போவதாகவும், இதன் மூலம் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.