சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது - மேற்கு வங்காள கவர்னர்

ஞாயிறு, 10 நவம்பர் 2019 (12:16 IST)
மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார், நான் ரஜினிகாந்தின் ரசிகர் என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கார், கொல்கத்தாவிலுள்ள ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்துக் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த கவர்னர் கூறியதாவது:
 ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.  அவருக்கு மக்கள் செலவாக்கு உள்ளதஅவரது சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்து இருகி்றேன். ஆனால்,அரசியலில் அவர் எப்படி செயல்படுவார் என்பது குறித்து என்னால் கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 
மேற்கு வங்காள கவர்னரின் பேச்சுக்கு ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்