மின்சார ரயிலில் பாம்பு - அலறியபடி ஓட்டம் பிடித்த பயணிகள்

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (10:19 IST)
மின்சார ரயிலில் பாம்பு இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மும்பையில் மின்சார ரயில் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். அப்போது பயணி ஒருவர் ரயிலில் பாம்பு ஒன்று பயணிகள் கைபிடிக்கும் இடத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் மற்ற பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
 
உடனடியாக பயணி ஒருவர் பாம்பை பிடித்து வெளியே போட்டுவிட்டார். இதனை அங்கிருந்த நபர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டார். இந்த காட்சி தற்பொழுது வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்