”ஃபட்நாவிஸ் ஒரு திருடன்”.. கொந்தளிக்கும் சிவசேனா

Arun Prasath

செவ்வாய், 26 நவம்பர் 2019 (09:12 IST)
மஹாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்தது குறித்து “ஃபட்நாவிஸ் திருடனை போல் பதவி வகித்துள்ளார்” என சிவசேனா விமர்சித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்ததை எதிர்த்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவசேனா தனது ”சாம்னா” நாளேட்டில் ”தேவேந்திர ஃபட்நாவிஸ் ஒரு திருடனை போல் பதவி ஏற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் திருடி கொண்டு வந்த ஆதரவு கடிதத்தை ஏற்று கவர்னர் ஆட்சி அமைக்க வைத்தது மோசடியின் உச்சம்” என விமர்சித்துள்ளது.

மேலும், “25 ஆண்டுகால சிவசேனாவின் நட்பை மதிக்காதவர்கள் ஒரு நாள் அஜித் பவாரையும் தூக்கி எரிவார்கள். பாஜகவும் அஜித்பவாரும் மஹாராஷ்டிரா மாநில மக்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டார்கள்” என அந்த நாளேட்டில் விமர்சித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்