மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்திர்பூர் அரசு மருத்துவமனையில் உத்தவ்சிங் ஜோஷி என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக வந்தபோது, நீண்ட வரிசையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மருத்துவர் ராஜேஷ் மிஸ்ரா என்பவரிடம் அவர் தனது ஆதங்கத்தை கூற, உடனே அந்த மருத்துவர் அவரை கன்னத்தில் அறைந்து, உதைத்தார்.
அது மட்டுமின்றி, அந்த முதியவரை அடித்து உதைத்து, தரதர என மருத்துவரும், மருத்துவ ஊழியர்களும் இழுத்து வெளியே விரட்டிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் மனிதாபிமானம் இன்றி, மிகவும் மோசமாக 70 வயது முதியவரை தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை எடுத்துக் கொண்டு, அந்த மருத்துவருக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.