கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற பகுதியில் நேற்று அரசு ஊழியர் தேர்வு நடைபெற்ற நிலையில், காலை 7 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து படித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து திடீரென பறந்து வந்த பருந்து ஹால் டிக்கெட்டை கவ்வி சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உதவிக்கு மற்றவர்களை அழைத்தார். ஹால் டிக்கெட்டை எடுத்த அந்த பருந்து மாடியில் உள்ள ஜன்னலில் உட்கார்ந்திருந்தது. ஹால் டிக்கெட் தொலைத்த பெண் உள்பட, சக தேர்வர்கள் அந்த பருந்தை நோக்கி கத்திய நிலையில், அது அசையாமல் இருந்தது.
அதன்பின், அந்த பெண் ஹால் டிக்கெட்டை எடுத்து உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு சென்றதால், அவரால் தேர்வு எழுத முடிந்தது.