2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மாணவர்கள் எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த தேர்வை எழுத மாணவர்கள் ஒரே ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.