திருப்பதி மலையிலுள்ள ஆலயப் பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சமீபத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தேவஸ்தானத்திலும் உயர் நிலை பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி கோயில் வளாகத்தில் விமானங்கள் மற்றும் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட நிலையில், சிலர் விதிமுறைகளை மீறி டிரோன் பறக்க விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதோடு மட்டுமின்றி, திருச்சானூர், ஒண்டிமிட்டா, அமராவதி, நாகலாபுரம், கபில தீர்த்தம் மற்றும் நாராயணவனம் உள்ளிட்ட கோவில்களில் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன.