திருப்பதியில் உள்ள தீர்த்தங்களும் அதனால் கிடைக்கும் பலன்களும்...!

Mahendran

வெள்ளி, 16 மே 2025 (18:31 IST)
திருப்பதி மலையில் வெங்கடேசப் பெருமாள் வீற்றிருக்கும் பக்தி நிறைந்த இடம். இங்கே பல புனித தீர்த்தக் குளங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றையும், அவற்றில் நீராடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்க்கலாம்:
 
சுவாமி புஷ்கரணி
இது பெருமாள் சன்னிதிக்கு அருகில் உள்ள தீர்த்தமாகும். புனித தீர்த்தங்களில் முதன்மையானது. மார்கழி மாதம் வளர்பிறை துவாதசியில், காலை 4:30 முதல் 10:30 வரை அனைத்து தீர்த்தங்களும் இதில் கலந்து விடுகின்றன. அன்றைய தினம் இங்கு நீராடுவது மோக்ஷத்தை தரும்.
 
குமார தீர்த்தம்
மாசி பவுர்ணமியன்று மகம் நட்சத்திரத்தில் அனைத்து தீர்த்தங்களும் இதில் கூடுகின்றன. இங்கு நீராடினால், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். ராஜசூய யாகத்தின் பலனைப் பெறலாம்.
 
 தும்புரு தீர்த்தம்
பங்குனி பவுர்ணமி அன்று நீராடினால், இறைவனின் அருள் கிடைக்கும். இந்த இடத்தில் முனிவர் தும்புரு தவம் இருந்தார்.
 
 ஆகாச கங்கை
தினமும் இந்த தீர்த்தத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. பாவங்களை போக்கும் இடம். சித்திரை பவுர்ணமி அன்று நீராடுவது சிறப்பு.
 
பாண்டு தீர்த்தம்
வைகாசி மாத வளர்பிறை துவாதசி செவ்வாய்க்கிழமை அன்று நீராடினால், பாவவிமோசனம் ஏற்படும்.
 
பாபவிநாசன தீர்த்தம்
ஐப்பசி மாதத்தில், ஞாயிற்றுக்கிழமை உத்திராட நட்சத்திரம் மற்றும் சப்தமி திதியில் நீராடினால், ஞானம் பெரும்.
 
இவை அனைத்தும் பக்தர்களுக்கு ஆன்மிக வளர்ச்சி தரும் தீர்த்தங்கள்.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்