மே மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு: அதிர்ச்சி அறிவிப்பு!

திங்கள், 2 மே 2022 (12:07 IST)
மே மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கெளதம் புத்தா நகர் என்ற பகுதியில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
நாளை நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 மேலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை என்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள இந்த தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்