அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கும் அஜித் பட இயக்குனர்…. அறிவிப்பு எப்போது?

திங்கள், 2 மே 2022 (10:21 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் ஆகியுள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். இதனால் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அடுத்து அவர் ஏற்கனவே இயக்கியுள்ள மன்மதலீலை படத்தின் ரிலீஸ் வேலைகளில் இறங்கியுள்ளார். இதையடுத்து இப்போது அவர் நாகசைதன்யா நடிக்கும் படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சொலல்ப்படுகிறது. வெங்கட்பிரபு நாக சைதன்யா படத்தை இயக்கி முடித்ததும் இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்