கூகுள் பே மூலம் காணிக்கை: டிஜிட்டலுக்கு மாறிய சபரிமலை!

வியாழன், 2 டிசம்பர் 2021 (15:55 IST)
சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூகுள் பே செயலி வழியாகவும் காணிக்கை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஆம், சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணைய வழி சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் QR code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
 
அதோடு பக்தர்கள் 9495999919 என்ற மொபைல் எண் மூலம் ‘கூகுள் பே’ செயலி வழியாகவும் காணிக்கை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையை, தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்