ரூ. 5, ரூ.10 ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் - ரிசர்வ் வங்கி

சனி, 23 ஜனவரி 2021 (17:19 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு எனும் டிமானிஸ்டேசன் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், வரும் 2021 மார்ச்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ. 5, ரூ.10 ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இந்தப்பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல் பணமதிப்பிழப்பிற்கு பிறகு கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா கலர்  ரூ.100 நோட்டுகளைத்  திரும்பப்பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்