முன்னதாக, ஒரு நாளில் மூன்று மாவட்டங்களுக்கு செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், திருச்சியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எதிர்பாராத வகையில் மக்கள் கூட்டம் திரண்டதால், திட்டமிட்டபடி பிரசாரத்தை மேற்கொள்ள முடியவில்லை. இந்த பெரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, அவரது சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.