’ரூ.30,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும்’ பூபேஷ் பாகல் பிரதமர் மோடிக்கு கடிதம்.

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (19:32 IST)
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1329 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18601-ல் இருந்து 18985 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 603 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சட்டீஸ்கரில் இதுவரை 36 பேர் கொரோனாவால் பாதிக்கபாட்டுள்ளனர். அதில் 25 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா நிவாரண பணிக்காக சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ரூ.30,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்