முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கர்நாடகா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாவை ஏற்கனவே ஒருமுறை திருப்பி அனுப்பிய ஆளுநர் தற்போது மீண்டும் ஒருமுறை திருப்பி அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக எம்எல்ஏக்களின் எதிர்ப்பையும், மீறி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும், இது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதிக்கும் அவர் பரிசீலனைக்கு அனுப்பினார்.
இந்த நிலையில், கர்நாடக சட்டத்துறை இந்த மசோதாவை மீண்டும் திருத்தி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த மசோதாவையும் இரண்டாவது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.
இது குறித்து ஆளுநர் விளக்கம் அளித்த போது, அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா, இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.