உலக நாயகன் கமல்ஹாசன் கன்னடம் மொழி தமிழில் இருந்து பிறந்தது என்ற கருத்துக்கு மன்னிப்பு கோர மறுத்தார். மேலும் தவறு செய்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்பேன், ஆனால் தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்,.
"நான் முன்பும் அச்சுறுத்தப்பட்டுள்ளேன்... ஆனால் அன்பே வெல்லும். கர்நாடகா, ஆந்தர பிரதேசம், மற்றும் கேரளா ஆகியோருக்கு எனக்கு உண்மையான அன்பு இருக்கிறது. வேறு ஏதேனும் எண்ணத்தோடு உள்ளவர்கள் தான் தவறாக சந்தேகிப்பார்கள்," என்று அவர் கூறினார்.
"நான் சொன்னது அன்பால் மட்டுமே கூறப்பட்டது, பல வரலாற்றாசிரியர்கள் எனக்கு மொழி வரலாறை கற்றுத்தந்துள்ளனர். நான் ஏதேனும் தவறாகப் பொருள் கூறவில்லை," என்று ஏற்கனவே அவர் தெரிவித்தார்.