இது குறித்து சிபிஐ ரகசிய விசாரணை நடத்தியதில், ரயில்வே தேர்வு கேள்வித்தாளை தயாரித்தவர் கையால் கேள்விகளை எழுதி, அதை பணத்திற்காக வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஒன்பது ரயில்வே அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையால் எழுதிய வினாத்தாளை, ஒரு எஞ்சின் டிரைவரிடம் வழங்கியதாகவும், அந்த நபர் ஹிந்தி மற்றும் வேறு சில மொழிகளில் வினாத்தாள்களை தயாரித்து விநியோகம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.