எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதானி குடும்பத்தில் எல்ஐசி ₹5,000 கோடி முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், பொதுமக்களின் காப்பீடு பணத்தில் அதானிக்கு ஆதாயம் கிடைப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.
அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம், கடந்த வாரம் கடன் பத்திரங்களை வெளியிட்ட நிலையில் ₹5,000 கோடி திரட்டியது. 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத இந்த கடன் பத்திரங்களை எல்ஐசி வாங்கியுள்ளதாகவும், இதற்கு ஆண்டுக்கு 7.75% வட்டி அதானி குழுமம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பணம், காப்பீடு, அதற்கான பிரிமியம் தொகை அனைத்தும் மக்களுடையது. ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், வசதிகள், பாதுகாப்பு அனைத்தும் அதானிக்கா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே எல்ஐசி, இந்திய பங்குச் சந்தையில் பெரும் அளவில் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது அதானி நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.