கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, இரு தரப்பினரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக திடீரென அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.