க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்!

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:33 IST)
க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்!
கியூ ஆர் கோட் அட்டையை கழுத்தில் அணிந்து கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் ஒருவர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
தற்போது டிஜிட்டல் மூலமே அனைத்து பரிவர்த்தனையும் நடப்பதால் செல்போன் மூலமும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன 
 
பர்ஸில் பணம் வைத்துக் கொள்வது என்பதே தற்போது அரிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் முறையை தொடங்கியுள்ளார் 
 
இதற்கான க்யூ ஆர் கோட்அனுமதியை பெற்று தனது கழுத்தில் அந்த அட்டையை அணிந்து கொண்டு டிஜிட்டல் முறையில் அவர் பிச்சை எடுக்கிறார். அவருக்கு டிஜிட்டல் முறையிலேயே பலர் பிச்சைக்கு போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது வருங்காலத்தில் பல பிச்சைக்காரர்கள் இதேபோல்தான் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்