சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பாலிவுட் இயக்குனர்!

வியாழன், 27 ஜனவரி 2022 (16:27 IST)
இயக்குனர் சுனில் தர்ஷன் என்பவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் மீதும் கூகுள் நிறுவனத்தின் மீது இந்தியாவைச் சேர்ந்த சுனில் தர்ஷன் என்ற சினிமா இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

சுனில் தர்ஷன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு ஏக் ஹசினா ஏக் திவானா தா என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் உரிமை தன்னிடம் மட்டுமே உள்ளதாகவும் யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய அனுமதி இல்லாமல் யுடியூபில் இந்த படத்தை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அதை நீக்குமாறு பலமுறை கூகுள் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியும் நீக்கப்படாமல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து இப்போது நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்