நடிகையின் வழக்கில் டார்கெட் செய்யப்படும் பிரதமர்

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (13:20 IST)
பாகிஸ்தானிற்கு செல்வது நரகத்திற்கு செல்வதை போன்றது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார்.


 


காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகை ரம்யா, ”பாகிஸ்தான் நரகம் அல்ல, அது ஒரு நல்ல நாடு” அவரின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்தார். அதனால், ரம்யா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரம்யாவிற்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறிய கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திக்விஜய் சிங் கூறியதாவது, ”அத்வானி கூட தான் பாகிஸ்தானிற்கு சென்று அந்நாட்டின் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்து பேசியுள்ளார். ஏன், பிரதமர் மோடி, கூட தான் பாகிஸ்தான் சென்றுள்ளார். ஆனால் அந்த நாடு நரகம் அல்ல, நல்ல நாடு என ரம்யா சொன்னால் அவர் மீது வழக்கா.” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்