சபரிமலை வருகையை முன்னிட்டு, ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் செல்ல, அங்கிருந்து கார் மூலம் பம்பைக்கு செல்ல, பின்பு பம்பை இருந்து நடைபயணமாக கோவிலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சன்னிதானம் மற்றும் தேவசம் விருந்தினர் மாளிகையை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேலும், சபரிமலை வருகைக்கு முன்னர் சாலையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.